![]()
நாமக்கல்: நாமக்கல் மண்டலத்தில், முட்டை விலை 480 காசுகளாக இருந்து வந்தது. இந்த நிலையில், முட்டை விலையில் 5 காசுகள் நேற்று என்இசிசி உயர்த்தியது. இதன்படி, ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை 480 காசில் இருந்து, 485 காசாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சபரிமலை சீசன் துவங்கியுள்ளதால், தமிழகம் மற்றும் கேரளாவில் முட்டை விற்பனை குறைந்து வருகிறது. இதனால் முட்டை விலையை என்இசிசி தொடர்ந்து குறைத்து வந்த நிலையில் தற்போது உயர்த்தியுள்ளது.
The post முட்டை விலை 5 காசுகள் உயர்வு appeared first on Dinakaran.
