×

தனுஷ்கோடி மணல்திட்டில் இலங்கை தமிழர் 7 பேர் மீட்பு

ராமேஸ்வரம்: இலங்கையை சேர்ந்த தமிழர்கள் 7 பேர் நேற்று முன்தினம் இரவில் தலைமன்னாரில் இருந்து படகில் ராமேஸ்வரம் அருகே தனுஷ்கோடிக்கு வந்தனர். நள்ளிரவில் படகோட்டிகள் அவர்களை, தனுஷ்கோடி கடல் பகுதியில் உள்ள நான்காம் மணல் திட்டில் இறக்கி விட்டு திரும்பச் சென்று விட்டனர். நேற்று அதிகாலை தனுஷ்கோடி மீனவர்கள் இதுபற்றி கொடுத்த தகவலின்படி ராமேஸ்வரம் மரைன் போலீசார் சென்று 7 பேரையும் மீட்டு விசாரணை நடத்தினர்.

இதில் அவர்கள் தலைமன்னார் சாந்திபுரம் பகுதியை சேர்ந்த ஞானஜோதி(46), இவரது 12 வயது மகன், அமுதன்(32), இவரது மனைவி கீதன்ஜனா(29), 12 வயது மகன், 5 மற்றும் இரண்டரை வயது மகள்கள் என்பது தெரியவந்தது. இவர்கள் நேற்று முன்தினம் இரவு 8.30 மணியளவில் தலைமன்னார் கடற்கரையில் இருந்து ரூ.1லட்சம் கொடுத்து படகில் புறப்பட்டு தனுஷ்கோடி வந்துள்ளனர். நள்ளிரவு 11.30 மணியளவில் படகோட்டிகள் மணல்திட்டில் இறக்கிவிட்டு சென்றதாக தெரிவித்தனர்.

The post தனுஷ்கோடி மணல்திட்டில் இலங்கை தமிழர் 7 பேர் மீட்பு appeared first on Dinakaran.

Tags : Dhanushkodi ,Rameshwaram ,Dhamannar ,
× RELATED மூணாறில் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற நோட்டீஸ்