×

அதிகாரிகள் விரைந்து செயலாற்றிட தலைமைச் செயலாளர் அறிவுறுத்தல்!

சென்னை: மழை நிவாரண பணிகளில் விரைந்து செயலாற்றிட தொடர்புடைய துறை செயலாளர்களுக்கு தலைமைச் செயலாளர் அறிவுறுத்தியுள்ளார். ஒவ்வொரு துறையும் புயலை எதிர்கொள்ள முழு அளவில் தயார் நிலையில் இருப்பதாக உறுதியாக நம்புகிறேன். எங்கிருந்தாலும் துறை செயல்பாடுகளை கண்காணித்து, அத்தியாவசிய சேவைகள் தடையின்றி வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார். பொதுமக்கள் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்யுமாறு அதிகாரிகளுக்கு தலைமைச் செயலாளர் அறிவுறுத்தியுள்ளார்.

 

The post அதிகாரிகள் விரைந்து செயலாற்றிட தலைமைச் செயலாளர் அறிவுறுத்தல்! appeared first on Dinakaran.

Tags : Chief Secretary ,CHENNAI ,Dinakaran ,
× RELATED வடகிழக்கு பருவ மழைக்கு முன் மழைநீர்...