×

திமுக அமைச்சர்களுக்கு எதிராக அதிமுக ஆட்சி காலத்தில் தொடரப்பட்ட சொத்து குவிப்பு மேல்முறையீட்டு வழக்கை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்

டெல்லி: தமிழ்நாடு அமைச்சர்கள் கே.என்.நேரு, ரகுபதி, ஐ.பெரியசாமி, முன்னாள் அமைச்சர்கள் கோ.சி.மணி, குழந்தைவேலு ஆகியோர் மீது தொடரப்பட்ட சொத்துகுவிப்பு வழக்குகளை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 1996-01 ஆண்டுகளில் திமுக அரசின்போது அமைச்சர்கள் வருமானத்திற்கு அதிகமாக சொத்துகுவித்ததாக அடுத்து வந்த அதிமுக அரசு வழக்கு தொடர்ந்தது. இவ்வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் அனைவரையும் விடுதலை செய்து உத்தரவு பிறப்பித்தது. 2015ம் ஆண்டு உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் அதிமுக அரசு முறையீடு செய்தது. அதிமுக அரசு செய்த முறையீட்டு வழக்கை தள்ளுபடி செய்து இன்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கவாய், நரசிம்மா அமர்வு உத்தரவிட்டுள்ளது.

The post திமுக அமைச்சர்களுக்கு எதிராக அதிமுக ஆட்சி காலத்தில் தொடரப்பட்ட சொத்து குவிப்பு மேல்முறையீட்டு வழக்கை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம் appeared first on Dinakaran.

Tags : Supreme Court ,DMK ,AIADMK ,Delhi ,Tamil Nadu ,KN Nehru ,Raghupathi ,I Periyasamy ,K.C.Mani ,Kuddavelu ,Dinakaran ,
× RELATED வங்கதேசத்தில் அரசு வேலைவாய்ப்புகளில்...