×

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்துக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்..!!

டெல்லி: கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்துக்கு எதிரான மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. தமிழ்நாட்டில் மகளிருக்கு ரூ.1000 உரிமைத் தொகை வழங்கும் திட்டத்தை எதிர்த்து மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். தமிழ்நாடு அரசு ஏற்கனவே கடனில் உள்ள சூழ்நிலையில் இதுபோன்ற திட்டங்கள் கடன் சுமையை மேலும் அதிகரிக்கும் என மனுவில் தகவல் தெரிவிக்கப்பட்டு இருந்தது. உச்சநீதிமன்ற நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான அமர்வில் மனு விசாரரணைக்கு வந்தது. மனுவை ஏற்க மறுத்த நீதிபதிகள், தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

The post கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்துக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்..!! appeared first on Dinakaran.

Tags : Supreme Court ,Delhi ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED நீட் முறைகேடு தொடர்பான வழக்கில்...