
சங்கரன்கோவில்: சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் நோயாளிக்கு தூய்மை பணியாளர் தையல் போட்ட வீடியோ வலைதளங்களில் வைரலானதையடுத்து, அவர் பணிநீக்கம் செய்யப்பட்டார். தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் நேற்று முன்தினம் காலை தலையில் அடிபட்டு காயத்துடன் நோயாளி சென்றுள்ளார். அவருக்கு தூய்மை பணியாளர் ஒருவர், வலி நிவாரணியும் கொடுக்காமல் அலட்சியமாக தையல் போட்டுள்ளார். இதனால் அந்த நோயாளி வலி தாங்க முடியாமல் அலறித் துடித்துள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து நேற்று சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குநர் பிரேமலதா ஆய்வு மேற்கொண்டார். அப்போது நோயாளிக்கு தையல் போட்ட ஊழியர் சுரேஷை பணி நீக்கம் செய்து உத்தரவிட்டார்.
The post சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் நோயாளிக்கு தையல் போட்ட தூய்மை பணியாளர் நீக்கம் appeared first on Dinakaran.