×

ஆன்லைன் விளையாட்டு விவகாரம் தமிழ்நாடு அரசின் மேல்முறையீட்டு மனு விசாரணைக்கு ஏற்பு: உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: ஆன்லைன் ரம்மி, போக்கர் போன்ற இணையதள சூதாட்ட விளையாட்டுகளுக்குத் தடைவிதித்து கடந்த 2020ம் ஆண்டு நவம்பர் 21ம் தேதி தமிழ்நாடு அரசு சட்டம் இயற்றியது. இதையடுத்து அந்த சட்டத்தை ரத்து செய்யக் கோரி ஜங்லி கேம்ஸ், ப்ளே கேம்ஸ், ரீட் டிஜிட்டல் ஆகிய நிறுவனங்கள் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டது.  இதைத் தொடர்ந்து வழக்கை விசாரித்த அப்போதைய தலைமை நீதிபதி அமர்வு, ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு எதிரான தமிழ்நாடு அரசின் சட்டத்தை ரத்து செய்து கடந்த 2021ம் ஆண்டு ஆகஸ்ட் 3ம் தேதி உத்தரவிட்டது.

இது தொடர்பாக தமிழ்நாடு அரசு தொடர்ந்த மேல்முறையீட்டு மனு உச்ச நீதிமன்றத்தில் நேற்று நீதிபதிகள் அனிருத்தா போஸ் மற்றும் பி.எம்.திரிவேதி ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ‘‘ தமிழ்நாடு அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்கிறது. இருப்பினும் வழக்கை டிசம்பர் 7ம் தேதி விசாரிக்கிறோம் என உத்தரவிட்டார். இதில் தமிழ்நாடு அரசு தரப்பில் வழக்கறிஞர் சபரீஷ் சுப்ரமணியன் ஆஜராகியிருந்தார்.

The post ஆன்லைன் விளையாட்டு விவகாரம் தமிழ்நாடு அரசின் மேல்முறையீட்டு மனு விசாரணைக்கு ஏற்பு: உச்ச நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu government ,Supreme Court ,New Delhi ,
× RELATED தமிழ்நாட்டில் மகளிர் உரிமைத் தொகை...