×

3 தினங்கள் இரவில் பேட்டை அருகேயுள்ள ரயில்வே கேட் மூடல்

நெல்லை, மார்ச் 28: புதுப்பேட்டை- சேரன்மகாதேவி இடையே உள்ள ரயில்வே கேட் வரும் 30ம் தேதி தொடங்கி 3 தினங்கள் இரவில் மூடப்படுகிறது. நெல்லை- தென்காசி மார்க்கத்தில் ரயில்வே பராமரிப்புக்காக ரயில்வே கேட்டுகள் மூடப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.a அந்த வகையில் புதுப்பேட்டை- சேரன்மகாதேவி இடையே காணப்படும் ரயில்வே கேட்(லெவல் கிராசிங் எண்.29) 3 தினங்களுக்கு இரவில் மூடப்படுகிறது. அதன்படி வரும் நாளை மறுதினம் (30ம் தேதி) இரவு 9 மணி துவங்கி, மார்ச் 31ம் தேதி காலை 8 மணி வரையும், இதே போல் ஏப். 2ம் தேதி இரவு 10 மணிக்குத் துவங்கி மறுநாள் 3ம் தேதி அதிகாலை 5 மணி வரையும் கேட் மூடப்படுகிறது. இதைத்தொடர்ந்து வரும் ஏப் 5ம் தேதி இரவு 10 மணிக்குத் துவங்கி, மறுதினம் ஏப். 6ம் தேதி காலை 6 மணி வரைக்கும் கேட் மூடப்படும். அவ்வழியாக 3 தினங்களும் இரவு நேரங்களில் செல்வோர் மாற்றுப்பாதையை பயன்படுத்துமாறு ரயில்வே அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Tags : Pettah ,
× RELATED பேட்டை எம்ஜிஆர் நகரில் அடிப்படை வசதி...