×

ஆம்பூர் அருகே மரத்தில் பைக் மோதி கட்டிட தொழிலாளி பலி

விகேபுரம்,மார்ச் 25: ஆம்பூர் அருகே மரத்தில் பைக் மோதி கட்டிட தொழிலாளி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். ஆம்பூர் அருகே பூவன் குறிச்சியைச் சார்ந்த சவுந்தரராஜன் மகன் மாரியப்பன் (22). கட்டிட தொழிலாளியான இவர் நேற்று முன்தினம் டாணாவில் உள்ள தனது நண்பரின் தந்தை இறந்ததற்காக டாணாவிற்கு வந்தார். தனது ஊரான பூவன்குறிச்சிக்கு முதலியார்பட்டி வழியாக பைக்கில் சென்று கொண்டிருந்த போது நிலைதடுமாறி மரத்தில் மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவரை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுதித்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று மாரியப்பன் பரிதாபமாக இறந்தார். இது குறித்து விகேபுரம் இன்ஸ்பெக்டர் பெருமாள் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags : Ambur ,
× RELATED ஆம்பூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில்...