×

லட்சுமி நாராயண பெருமாள் கோயிலில் பாலிடெக்னிக் மாணவர்கள் உழவார பணி

வலங்கைமான்: வலங்கைமான் அடுத்த ஆதிச்ச மங்கலம் ஊராட்சி லட்சுமி நாராயண பெருமாள் கோயிலில் வலங்கைமான் பாலிடெக்னிக் நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் உழவார பணி மேற்கொண்டனர். வலங்கைமான் அடுத்த தொழுவூர் அரசினர் பலவகை தொழில்நுட்பக் கல்லூரி உள்ளது. இக்கல்லூரியில் படிக்கும் நாட்டு நல பணித்திட்ட மாணவர்கள் நேற்று முதல் வரும் 29ம் தேதி வரை 7 நாட்கள் நாட்டு நலப்பணித் திட்ட பணிகளில் ஈடுபடுகின்றனர் . நாட்டு நலப்பணித்திட்ட முகமானது பள்ளி முதல்வர் ஜான் லூயிஸ் தலைமையில் நடைபெற்றது முதல்வரின் நேர்முக உதவியாளர் வேல்முருகன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். ஆதிச்சமங்கலம் ஊராட்சி தலைவர் துர்கா தேவி வைரவேல் துணைத் தலைவர் சுமதி தியாகராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாம் அமைப்பாளராக நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் பத்மராஜன் செயல்பட்டார். மாணவர்கள் நூற்றாண்டு பழமையான ஆதிச்சமங்கலம் ஊராட்சி லட்சுமி நாராயண பெருமாள் கோயிலில் உழவாரப் பணியை மேற்கொண்டனர். மரம் நடுதல் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது நிகழ்ச்சியில் பாலிடெக்னிக் விரிவுரையாளர்கள் பலரும் கலந்து கொண்டனர்.



Tags : Lakshmi Narayana Perumal temple ,
× RELATED மாசிமக தேர்களை தயார் செய்யும் பணி தீவிரம்