×

திருவையாறு அருகே எய்ட்ஸ் கட்டுப்பாடு குறித்து விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி

திருவையாறு: திருவையாறு அடுத்த குளிமாத்தூர் ஊராட்சியில் தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம் மற்றும் தனியார் கிராம வளர்ச்சி அறக்கட்டளை சார்பிலும் எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி நடைபெற்றது. ஊராட்சி மன்ற தலைவர் குணசுந்தரி தலைமை வகித்தார். மாவட்ட வளர்ச்சி அலுவலர் கதிரேசன், கவுன்சிலர் நிஷா, முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் சுவாமிநாதன், மேற்பார்வையாளர்கள் செந்தாமரைச்செல்வி, கருப்பையா, தொடர் பணியாளர் தமிழ்வாணன் ஆகியோர் கலந்துகொண்டு எய்ட்ஸ் விழிப்புணர்வு பற்றி பேசினர். அதை தொடர்ந்து கிராமிய கலை நிகழ்ச்சி மூலம் எய்ட்ஸ் நோய் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். நிகழ்ச்சியில் மக்கள் நல பணியாளர் நளினி, அங்கன்வாடி பணியாளர்கள், பொதுமக்கள், கலந்து கொண்டனர்.

Tags : Thiruvaiyaru ,
× RELATED திருவையாறு நூலகத்தில் உலக புத்தக தின விழா