×

பென்சனர்கள் கூட்டத்தில் தீர்மானம் மங்களமேடு டிஎஸ்பி பொறுப்பேற்பு

குன்னம்: பெரம்பலூர் மாவட்டம், மங்களமேடு உட்கோட்ட துணைக் காவல் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த ஜனனி பிரியா கோயமுத்தூர் மாவட்டம், மதுவிலக்கு அமலாக்க தடுப்பு சிறப்பு பிரிவு துணைக் காவல் கண்காணிப்பாளராக பணி மாறுதலில் சென்றுவிட்டார். இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவில் துணைக் காவல் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த, சீராளன் நேற்று மங்களமேடு உட்கோட்டத்தின் 8வது துணைக் காவல் கண்காணிப்பாளராக பொறுப்பேற்று கொண்டார். அவருக்கு மங்களமேடு, குன்னம், வி. களத்தூர் காவல் நிலைய அதிகாரிகள் மற்றும் காவலர்கள் நேரில் சந்தித்து வாழ்த்து கூறினர்.


Tags : Mangalamedu ,DSP ,
× RELATED செய்யாறு அருகே இன்று நடக்கும் திருமண...