×

கறம்பக்குடி பகுதிகளில் ஆடுகள் திருட்டு

கறம்பக்குடி,: புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே சுக்கிரன் விடுதி கிராமத்தை சேர்ந்தவர் மாணிக்கம். விவசாயி. இவர் சொந்தமாக ஆடு வளர்த்து வருகிறார். தினம் தோறும் ஆடுகளை மேய்ச்சலுக்கு கொண்டு சென்று விட்டு இரவு நேரத்தில் வீட்டின் அருகே ஆடுகளை கட்டி போடுவது வழக்கம். அதேபோல நேற்று முன்தினம் மாலை ஆடுகளை கட்டி போட்டி விட்டு வீட்டிற்குள் தூங்க சென்றுள்ளார். பின்னர் நள்ளிரவு ஆடுகள் அனைத்தும் கத்தும் சத்தம் கேட்டது. உடனே மாணிக்கம் ஜன்னல் வழியாக பார்த்தபோது, திருடர்கள் ஆடுகளை திருடி சரக்கு வேனில் ஏற்றி கொண்டு தப்பி சென்றனர். உடனடியாக மாணிக்கம் அலறல் சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர், கதவை திறக்க முயன்ற போது கதவுகள் பூட்டப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். திருடர்கள் அருகில் இருந்த வீடுகளின் கதவை பூட்டி விட்டு ஆடுகளை திருட வந்தது தெரிய வந்தது. இது அப்பகுதி மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து நள்ளிரவு நேரங்களில் அனைத்து கிராமங்களிலும் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Tags : Karambakudi ,
× RELATED கறம்பக்குடி அருகே தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனை