×

மக்களை தேடி மருத்துவ முகாம்

திருவாரூர், மார்ச் 19: திருவாரூரி்ல் நடந்த மக்களை தேடி மருத்துவ முகாமில் 250 பொதுமக்கள் பயனடைந்தனர். திருவாரூர் நகராட்சிக்குட்பட்ட 21வது வார்டில் மக்களை தேடி மருத்துவ முகாம் மாநில விவசாய தொழிலாளரணி துணைச்செயலா ளர், நகர்மன்ற உறுப்பினர் சங்கர் தலைமையில் நேற்று நடந்தது. நகர திமுக செயலாளர் வாரை பிரகாஷ், கவுன்சிலர்கள் அசோகன், ரஜினி சின்னா, ரேவதி ரகுபதி , கலைஞர் இலக்கிய பகுத்தறிவு பேரவை நிர்வாகி கருணாநிதி ஆகி யோர் முன்னிலை வகித்தனர்.இதில், நகர்மன்ற தலைவர் புவனப்பிரியா செந்தில் கலந்து கொண்டு மக் களை தேடி மருத்துவமுகாமை துவக்கி வைத்தார். முகாமில் கொடிக்கால் பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை சேர்ந்த டாக்டர் வைஷ்ணவி தேவி தலைமையிலான மருத்துவக்குழுவினர் பங்கேற்று பொது மக்களுக்கு பொது மருத்துவம், ரத்த அழுத்தம், சர்க்கரை, இசிஜி, எக்ஸ்ரே உள்ளிட்ட பல்வேறு மருத்துவ சிகிச்சைகளை மேற்கொண்டனர். இம்முகாம் மூலம் 250 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பயனடைந்தனர்.

Tags :
× RELATED திருச்சி விவசாயியுடன் வேளாண். கல்லூரி மாணவிகள் சந்திப்பு