×

மதுரையில் வைகை இலக்கிய திருவிழா வரும் 26, 27ல் நடக்கிறது

மதுரை, மார்ச் 18: மதுரையில் வரும் 26 மற்றும் 27ம் தேதிகளில் வைகை இலக்கிய திருவிழா நடத்தப்படவுள்ளது என எம்.பி வெங்கடேசன் தெரிவித்தார். மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர் ஆகிய 6 மாவட்டங்கள் இணைந்து, வைகை இலக்கிய திருவிழாவை நடத்துகின்றன. மதுரையில் உள்ள உலக தமிழ் சங்க கட்டிடத்தில் வரும் 26 மற்றும் 27ம் தேதிகளில் நடைபெறும், இந்த விழாவை நடத்துவது தொடர்பாக, நேற்று மதுரை கலெக்டர் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதற்கு, கலெக்டர் அனீஷ்சேகர் தலைமை வகித்தார். சு.வெங்கடேசன் எம்.பி மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்திற்கு பின், வெங்கடேசன் எம்.பி நிருபர்களிடம் கூறுகையில், ‘தமிழகத்தில் இலக்கிய திருவிழாவை நடத்த வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதில், குறுணை இலக்கியத்திருவிழா, சிறுவாணி இலக்கியத்திருவிழா, காவிரி இலக்கிய திருவிழா, சென்னை இலக்கிய திருவிழா ஆகியவை நடந்து முடிந்துள்ளது. ஐந்தாவதாக வைகை இலக்கிய திருவிழா மதுரையில் நடைபெற உள்ளது. இந்த விழா இரண்டு நாட்கள் மூன்று அமர்வாக நடைபெறும். இதில், 60க்கு மேற்பட்ட ஆளுமைகள் பங்கேற்க உள்ளனர். விழாவானது மதுரை, வைகை பற்றிய இலக்கியம், கவிதை, பாடல்கள், உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் நடைபெறும். இதனை தேசிய தமிழ் திருவிழாவாக நடத்த ஏற்பாடு செய்து வருகிறோம்’’ என்றார்.

Tags : Vaigai Literary Festival ,Madurai ,
× RELATED சீசன் துவங்கியும் மாம்பழங்கள் வரத்து இல்லை