×

தஞ்சாவூர், பட்டுக்கோட்டையில் நாளை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம். நடத்தும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை (சனிக்கிழமை) ஏனாதி ராஜப்பா கலை மற்றும் அறிவியல் கல்லூரி பட்டுக்கோட்டையில் 8.30 மணிமுதல் பிற்பகல் காலை 3 மணிவரை நடைபெற உள்ளது. இவ்வேலைவாய்ப்பு முகாமில் 100-க்கும் மேற்பட்ட முன்னனி தனியார்துறை நிறுவனங்கள் கலந்து கொள்கின்றனர். 5ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை படித்தோர், டிப்ளமோ, ஐடிஐ. பட்டதாரிகள். நர்சிங் மற்றும் பி.இ கல்வி தகுதிகளுக்குரிய வேலைநாடுவோருக்கு 1000-க்கும் மேற்பட்ட வேலைவாய்ப்பினை அளிக்க உள்ளனர்.முகாமில் கலந்து கொள்பவர்கள் தங்களின் சுய விவர அறிக்கை, கல்விச்சான்றுகள், ஆதார் அட்டை மற்றும் இதர சான்றிதழ்களின் நகல்களுடன் கலந்து கொண்டு பயன்பெறலாம். இம்முகாமில் கலந்துகொள்ள விருப்பமுள்ளோர் தங்களது சுய விவரங்களை www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம் என கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்துள்ளார்.

Tags : Thanjavur ,Pattukottai ,
× RELATED தஞ்சாவூரில் பட்டப்பகலில் பரபரப்பு...