×

சமத்துவபுரம் அருகே குடியிருப்பில் மின்இணைப்பு துண்டிப்பு கண்டித்து தீப்பந்த போராட்டம்

புதுக்கோட்டை: புதுக்கோட்டை சமத்துவபுரம் அருகே குடியிருப்பில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டத்தை கண்டித்து ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கையில் தீப்பந்தங்களை ஏந்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. புதுக்கோட்டை சமத்துவபுரம் அருகே நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் கட்டப்பட்ட குடியிருப்பில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதைக் கண்டித்து, ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நேற்று (புதன்கிழமை) தீப்பந்தப் போராட்டம் நடைபெற்றது. அக்கட்சியின் நகரச் செயலர் ரமேஷ் தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் ராமச்சந்திரன் உள்ளிட்ட கட்சியினர் தீப்பந்தங்களுடன் கலந்து கொண்டு முழக்கங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட நிர்வாகம் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கோசங்கள் எழுப்பினர்.

Tags : Samathuvapuram ,
× RELATED மாசாணி அம்மன் கோயிலில் மயான கொள்ளை விழா