புதுக்கோட்டை: காஸ்விலை உயர்வை கண்டித்து அறந்தாங்கியில் மாதர் சம்மேளனம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் இந்திய மாதர் தேசிய சம்மேளனம் சார்பில் சமையல் காஸ் விலை உயர்வைக் கண்டித்தும், அதனைக் கட்டுப்படுத்த எந்த முயற்சியும் எடுக்காத ஒன்றிய அரசைக் கண்டித்தும் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, சம்மேளனத்தின் ஒன்றியச் செயலர் தனலட்சுமி தலைமை வகித்தார். ஒன்றியத் தலைவர் கோமதி முன்னிலை வகித்தார். நிர்வாகிகள் பலர் கோரிக்கையை வலியுறுத்திப் பேசினர்.ஒன்றிய அரசைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பினர். ஆர்ப்பாட்டம் நடந்த இடத்தில், எரிவாயு சிலிண்டரை வைத்து மாலை அணிவித்து, தேங்காய், பழம் வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.