×

விராலிமலை பகுதியில் மணல் கடத்திய டிராக்டர் பறிமுதல்

விராலிமலை, ஆக.11: விராலிமலை தாலுகா, மதயானைப்பட்டி, சாத்திவயல், பேராம்பூர், கல்லுப்பட்டி, கத்தலூர் ஆகிய ஊர்களை ஒட்டிய கோரையாற்று பகுதியில் இரவு நேரங்களில் மணல் அள்ளி கடத்திச் செல்வதாக போலீசாருக்கு தகவல் வந்தது. அதன் பேரில் மாத்தூர் எஸ்ஐ செல்லத்துரை தலைமையிலான போலீசார் நேற்று அதிகாலை அப்பகுதியில் கண்காணித்தனர். அப்போது கல்லுப்பட்டி அருகே உள்ள கோரையாற்றுக்குள் இருந்து வந்த ஒரு டிராக்டரை போலீசார் தடுத்து நிறுத்தினர்.வண்டியை நிறுத்திய டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். பின்னர் டிராக்டரை சோதனை நடத்திய போது அதில் கோரையாற்றிலிருந்து மணல் அள்ளி கடத்தி சென்றது தெரியவந்தது.  இதையடுத்து போலீசார் ஒரு யூனிட் மணலுடன் டிராக்டரை பறிமுதல் செய்தனர்.மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து மணல் கடத்திய இலுப்பூர் தாலுகா மங்களாபட்டியை சேர்ந்த அழகர் மகன் பாண்டியன் என்பவர் மீது வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

Tags : Viralimalai ,
× RELATED விராலிமலை மெய்க்கண்ணுடையாள் கோயில் பூச்சொரிதல் விழா