×

ஜெயங்கொண்டம் அருகே பெண்ணிடம் போனில் ஆபாசமாக பேசியவர் கைது

ஜெயங்கொண்டம், ஆக.10: ஜெயங்கொண்டம் அருகே பெண்ணிடம் போனில் ஆபாசமாக பேசிய வரை போலீசார் கைது செய்தனர். ஜெயங்கொண்டம் ஜெயங்கொண்டம் ஸ்டேட் பேங்க் காலனியில் வசிப்பவர் கணேசன் மகள் ரம்யா(39). கருத்து வேறுபாடு காரணமாக கணவனை பிரிந்து இரண்டு குழந்தைகளுடன் தனியாக வசித்து வருகிறார்..இவர் பள்ளி சிறுவர்களுக்கு அபாகஸ் கிளாஸ் எடுத்து வருகிறார்.  இந்நிலையில் இவருக்கு மர்ம நபர் ஒருவர் போன் செய்து ஆபாசமாக பேசியதாக கூறி. ரம்யா ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் கவிதா வழக்கு பதிவு செய்து போனில் ஆபாசமாக பேசிய நபரை தேடி விசாரணை செய்ததில் அவர் ஜெயங்கொண்டம் அருகில் உள்ள கடாரம் கொண்டான் கிராமத்தைச் சேர்ந்த ராமசாமி மகன் கண்ணன் (48) என்பது தெரியவந்தது. இதையடுத்து கண்ணனை கைது செய்து விசாரணை செய்து வருகின்றார்.

Tags : Jeyangondam ,
× RELATED ஜெயங்கொண்டம் அருகே வயலில் இறந்து கிடந்த மயில்