×

அரசு சிமென்ட் ஆலையில் 30 அடி உயரத்திலிருந்து கீழே விழுந்து வெல்டர் பலி

அரியலூர்,டிச.5: அரியலூர் மாவட்டம் கயர்லாபாத் கிராமத்தில் அரசு சிமென்ட் ஆலை இயங்கி வருகிறது. இந்த ஆலையில் குவாகம் கிராமத்தை சேர்ந்த சேகர் என்பவர் ஒப்பந்த வெல்டராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் நேற்று பணியின் போது சுமார் 30 அடி உயரத்திலிருந்து கீழே விழுந்ததில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற கயர்லாபாத் போலீசார், சேகர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Welder ,
× RELATED பகலில் வெல்டர் இரவில் கொள்ளை: பிரபல கொள்ளையன் ைகது