×

கஞ்சா விற்ற வாலிபர் கைது

தர்மபுரி, ஏப்.18:நல்லம்பள்ளியில் உள்ள அரசு தொடக்க பள்ளி பின்புறம், சிலர் கஞ்சா விற்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து அதியமான்கோட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்றனர். அப்போது, நல்லம்பள்ளி காந்திநகர் பகுதியை சேர்ந்த 19 வயது வாலிபர் மஞ்சள் பையில் மறைத்து வைத்து கஞ்சா பொட்டலங்கள் விற்றது தெரியவந்தது. அந்த வாலிபரை கைது செய்த அதியமான்கோட்டை போலீசார், அவரிடமிருந்த கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர்.

Tags :
× RELATED திரவுபதியம்மன் கோயில் கும்பாபிஷேக பெருவிழா