×

சானிடைசரால் கையை சுத்தம் செய்தவுடன் சிகரெட் பற்ற வைத்தவர் தீயில் கருகினார்

சென்னை: சென்னை அசோக் நகர் புதூர் பகுதியை சேர்ந்தவர் ரூபன் (50). கார்ப்பென்டரான இவர், தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு பணி முடிந்து வீட்டிற்கு வந்த ரூபன், கைகளை சானிடைசரால் சுத்தம் செய்தார். அப்போது, சானிடைசர் அவரது சட்டையிலும் பட்டுள்ளது. இந்நிலையில், சானிடைசர் ஈரம் காய்வதற்குள் கழிவறைக்கு சென்ற ரூபன், சிகரெட்டை பற்ற வைத்துள்ளார். அப்போது திடீரென அவரது கை மற்றும் சட்டையில் தீப்பற்றி மளமளவென எரிந்தது. இதில் அலறி துடித்த ரூபன் உதவி கேட்டு துடித்தார். உடனே வீட்டில் இருந்தவர்கள் கழிவறையின் கதவை உடைத்து தீயை அணைத்து, ரூபனை மீட்டனர். தீ விபத்தில் ரூபன் முகம் மற்றும் கைகளில் தீக்காயங்கள் ஏற்பட்டு உயிருக்கு போராடினார். உடனே அவரை உறவினர்கள் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை ெபற்று வருகிறார். இதுகுறித்து அசோக் நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்னர். சானிடைசரால் தீப்பிடித்து கார்பென்டர் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் அசோக் நகர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags :
× RELATED சமுதாய வளர்ச்சிக்கு சிறப்பாக...