×

கே.வி.குப்பம் அருகே சோகம் ஐஎப்எஸ் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்து பணத்தை இழந்த அரசு பள்ளி ஆசிரியர் தற்கொலை

 

கே.வி.குப்பம், ஜூலை 24: கே.வி.குப்பம் அருகே ஐஎப்எஸ் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்து பணத்தை இழந்ததால் அரசு பள்ளி ஆசிரியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அடுத்த மேல்மாயில் ஊராட்சி மயிலாடுமலை பகுதியை சேர்ந்தவர் பாண்டியன் (40). இவர் குடியாத்தம் அடுத்த கதிர்குளம் அரசினர் உயர்நிலை பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஏஜென்ட் மூலம் ஐ.எப்.எஸ். நிதி நிறுவனத்தில் ரூ.30 லட்சம் வரை முதலீடு செய்திருந்ததாக கூறப்படுகிறது.

 

Tags : K.V.Kuppam ,IFS Financial Institution ,Melmayil Panchayat Mayiladumalai… ,
× RELATED 236 வெற்றி பள்ளிகளில் மாணவர்களுக்கு...