சென்னை: நீதிமன்றங்களில் சாட்சியங்கள் அளிக்க ஆஜராகும் போது முறையான சீருடை அணிந்து செல்ல வேண்டும் என காவல்துறைக்கு அறிவுறுத்தி சுற்றறிக்கை பிறப்பிக்க டிஜிபிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மதுபோதையில் நீதிமன்றத்திற்கு சாட்சியம் அளிக்க வந்ததாக 2016ல் விழுப்புரம் சிறப்பு எஸ்.ஐ. ஆறுமுகத்திற்கு ஊதிய உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டதற்கு எதிராக அவர் வழக்கு தொடர்ந்திருந்தார். அதனை விசாரித்த தனி நீதிபதி தண்டனையை ரத்து செய்திருந்தார். இதற்கு எதிராக டிஜிபி மேல்முறையீடு செய்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது
