சென்னை: பேருந்து இ-டிக்கெட்டுகளில் விளம்பரங்கள் மூலம் வருவாயை உயர்த்த தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. டிக்கெட்டுகளின் பின்புறத்தில் விளம்பரங்களை அச்சிட அனுமதி வழங்கும் புதிய திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. டிக்கெட் அச்சிட பயன்படும் பேப்பர் ரோல்களை சொந்த செலவில் விளம்பர நிறுவனங்கள் தர வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
