×

திருவாரூரில் கூட்டுறவு வங்கி ஊழியர்களுக்கு ஆதரவாக ரேசன் கடை ஊழியர்களும் வேலை நிறுத்த போராட்டம்

திருவாரூர்: திருவாரூர் மாவட்டத்தில் கூட்டுறவு வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில் அவர்களுக்கு ஆதரவாக ரேசன் கடை ஊழியர்களும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள். தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர் சங்கத்தின் சார்பில் இன்று தமிழகம் முழுவதும் 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்த போராட்டம் மேற்கொண்டு வருகின்றனர்.

இதனை தொடர்ந்து திருவாரூர் மாவட்டத்தில் உள்ள 137 தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் 1000க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் அனைவரும் இன்று ஒரு நாள் வேலை நிறுத்தம் செய்து போரட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இவர்களுக்கு ஆதரவாக 400க்கு மேற்பட்ட ரேசன் கடை ஊழியர்கள் வேலை நிறுத்தில் ஈடுபட்டுள்ளனர்.

குறிப்பாக அனைத்து சங்க பணியாளர்களும் பயனையும் வகையில் புதிய ஊதிய நிர்ணயம் செய்யும் நிபந்தனைகளை தளர்த்திட வேண்டும், பணியாளர்கள் பணி ஓய்வு மற்றும் ஓய்வு கால பலன்களை வழங்குவதில் சட்டத்திற்கு முரணாக ஏற்பாடு தடைகளை உடனடியாக தளர்த்த வேண்டும், ஓய்வு ஊதியத்தை வயதி வழங்க வேண்டும் உள்ளிட்ட 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 500க்கும் மேற்பட்ட தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க ஊழியர்கள் மற்றும் ரேசன் கடை ஊழியர்கள் பேரணியாக வந்து திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழக அரசு அவர்களிடம் நேரடியா பேச்சு வார்த்தை நடத்த வேண்டும் இல்லையென்ற ஆகஸ்ட் 2ஆம் தேதியில் இருந்து காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்துள்ளனர்.

Tags : Raison shop ,Thiruvaroor ,Thiruvarur ,Rayson ,Tamil Nadu ,State ,All Employees Association ,
× RELATED ஆவின் நெய் விலை உயர்வு வாபஸ்