பஞ்சாப்பில் ரூ.55 கோடி ஜிஎஸ்டி போலி ரசீது மோசடி

சண்டிகர்: பஞ்சாப் மாநிலம், ஜலந்தரை சேர்ந்த பூபிந்தர் சர்மா ராம் சன்ஸ் கார்ப்பரேஷன் என்ற நிறுவனம் நடத்தி வருகிறார். உளவு துறை அளித்த தகவலை தொடர்ந்து அந்த நிறுவனத்தில் வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதில் எந்தவொரு பொருளையும் வழங்காமலேயே ஜிஎஸ்டி ரசீதுகளை வழங்கி மோசடியில் ஈடுபட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து பூபிந்தர் கைது செய்யப்பட்டார். அவரது நிறுவனம் சுமார் ரூ. 55.35 கோடி மதிப்பிலான போலி ரசீதுகளை உருவாக்கியுள்ளது தெரிய வந்துள்ளது.

Related Stories: