சென்னை: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த மழையால் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது. ஷீரடி, ஐதராபாத், திருச்சி, தூத்துக்குடி, கண்ணூரில் இருந்து வந்த விமானங்கள் வானில் வட்டமடித்தன. சுமார் 10 விமானங்கள் தரையிறங்க முடியாமல் நீண்ட நேரம் வானிலேயே வட்டமடித்தன. சென்னையில் இருந்து பல்வேறு இடங்களுக்கு செல்ல இருந்த விமானங்கள் 40 நிமிடம் தாமதமாக புறப்பட்டது
