சென்னை: கன்னியாகுமரியில் அணுக்கனிம சுரங்க நில ஒதுக்கீட்டு ஆணையை நீட்டித்ததற்கு திமுக எம்.பி. கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார். காலாவதியாகும் கடைசி நாளன்று ஆணையை தவெக அரசு நீட்டித்தது ஏற்புடையதல்ல. தவெக அரசின் இரட்டை நிலைப்பாடு, தென் மாவட்ட மக்களுக்கு செய்யும் பெரும் துரோகம் என்று குறிப்பிட்டுள்ளார்.
