×

கிருஷ்ணகிரியில் குறைதீர் கூட்டத்தில் 560 மனுக்கள் குவிந்தன

கிருஷ்ணகிரி, ஜூன் 9: கிருஷ்ணகிரியில் நடந்த மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் 560 மனுக்கள் குவிந்தன. கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், வாராந்திர மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம், கலெக்டர் தினேஷ்குமார் தலைமையில் நேற்று நடந்தது. இதில், பொதுமக்களிடம் வீட்டுமனைப் பட்டா, விலையில்லா தையல் இயந்திரம், சலவைப் பெட்டி, முதியோர் உதவித்தொகை, சாலை வசதி மற்றும் மின் இணைப்பு போன்ற பல்வேறு கோரிக்கைகள் குறித்த 560 மனுக்கள் அளித்தனர்.

அந்த மனுக்களை சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி, உரிய நடவடிக்கை எடுக்கும்படி கலெக்டர் உத்தரவிட்டார். இந்த கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் சாதனைக்குறள், துணை கலெக்டர் (பயிற்சி) சாய் சைதன்யா ஜாதவ், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) கிருஷ்ணன், தனித்துணை கலெக்டர் (சமூக பாதுகாப்பு திட்டம்) அபிநயா, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் சிவக்குமார் மற்றும் அனைத்து துறை முதன்மை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Krishnagiri ,People’s Grievance Redressal Day ,District Collector ,Collector ,Dinesh Kumar.… ,
× RELATED ராயக்கோட்டை வட்டாரத்தில் வயலட் கலர் சாமந்தி விளைச்சல் அமோகம்