திருவண்ணாமலை: கிரிவலப் பாதையில் மின்வெட்டு ஏற்பட்டதால் பக்தர்கள் அவதி அடைந்தனர். இரவில் மின்வெட்டு ஏற்பட்டதால் செல்போன் டார்ச் அடித்தபடி பக்தர்கள் கிரிவலம் சென்றனர். பௌர்ணமி அன்று கிரிவலம் சென்ற இளம்பெண்களுக்கு பாலியல் தொல்லை அளித்த நிலையில் மின்வெட்டால் அச்சம் ஏற்பட்டது. செங்கம் சாலை முதல் நிருதிலிங்கம் வரை 3 கி.மீ. தொலைவுக்கு ஏற்பட்ட மின்வெட்டால் பக்தர்கள் அவதி அடைந்தனர்.
