சென்னை: தேமுதிக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் வரும் 31ம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறும் என பிரேமலதா விஜயகாந்த் அறிவித்துள்ளார். பொதுச்செயலாளர் தலைமையில் வரும் ஞாயிற்றுக் கிழமை காலை 10.00 மணியளவில் சென்னை கோயம்பேட்டில் உள்ள தலைமை கழகத்தில் கேப்டன் ஆலயத்தில் நடைபெறவுள்ளது. அனைத்து மாவட்ட கழக செயலாளர்களும் தவறாமல் இந்த முக்கிய ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்
