×

ஓசூர், கோவை மற்றும் மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு தேவையான நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்: ஒன்றிய நிதியமைச்சரிடம் முதல்வர் விஜய் கோரிக்கை

சென்னை: ஓசூர், கோவை மற்றும் மதுரை ஆகிய நகரங்களின் பொதுப் போக்குவரத்தினை மேம்படுத்திடத் தேவையான மெட்ரோ ரயில் திட்டங்களைச் செயல்படுத்துவதற்குத் தேவையான நிதி ஒதுக்கீடு செய்திட வேண்டும் என்று ஒன்றிய நிதியமைச்சரிடம் முதல்வர் விஜய் கோரிக்கை வைத்துள்ளார். ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை நேற்று டெல்லியில் உள்ள அவரது அலுவலகத்தில், தமிழ்நாடு முதல்வர் ஜோசப் விஜய் மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேசினார்.

இச்சந்திப்பின்போது, விரைவான வளர்ச்சியைப் பெற்றுவரும் மாநிலமாக தமிழ்நாடு திகழ்ந்து வருகிறது.
இத்தகைய வளர்ச்சியை மேலும் ஊக்குவிக்கும் வகையில், முக்கிய உட்கட்டமைப்புத் திட்டங்களில் முதலீடு செய்வது இன்றியமையாதது என்பதால், தமிழ்நாட்டின் வளர்ச்சிக்குத் தேவையான துறைமுகங்கள், நெடுஞ்சாலைகள், ரயில்வே திட்டங்கள், தொழில் வழித்தடங்கள் ஆகியவற்றிற்கு முன்னுரிமை அளித்து நிதி ஒதுக்கீடு செய்திட வேண்டும்.

தமிழ்நாட்டின் வலுவான கல்விச்சூழலை மேலும் வலுப்படுத்த, தேசிய முக்கியத்துவம் வாய்ந்த கல்வி நிறுவனங்களை தமிழ்நாட்டில் நிறுவிடவும், தமிழ்நாட்டின் பொருளாதாரத்திலும், தொழில் வளர்ச்சியிலும் முக்கியப் பங்காற்றி வரும் ஓசூர், கோவை மற்றும் மதுரை ஆகிய நகரங்களின் பொதுப் போக்குவரத்தினை மேம்படுத்திடத் தேவையான மெட்ரோ ரயில் திட்டங்களைச் செயல்படுத்துவதற்குத் தேவையான நிதி ஒதுக்கீடு செய்திட வேண்டும் என்று ஒன்றிய நிதியமைச்சரிடம் தமிழ்நாடு முதல்வர் விஜய் கோரிக்கை விடுத்துள்ளார்.

Tags : Hosur ,Coimbatore ,Madurai ,Chief Minister ,Vijay ,Union Finance Minister ,Chennai ,Nirmala… ,
× RELATED ஜூன் 3ம் தேதி நலத்திட்ட உதவிகள் வழங்கி...