லக்னோ: ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 59வது லீக் போட்டி லக்னோவில் உள்ள ஏகானா மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் சென்னை – லக்னோ அணிகள் விளையாடி வருகின்றன. முதலில் ஆடிய சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 187 ரன்கள் எடுத்தது.188 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் லக்னோ அணி களமிறங்கியுள்ளது.
