- இலங்கை
- ஜனாதிபதி
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- முதல் அமைச்சர்
- விஜய்
- சென்னை
- அனுரகுமார திஸாநாயக்க
- தமிழக முதல்வர்
- திசாநாயக்க
- சி. ஜோசப் விஜய்
சென்னை: தமிழக முதல்வராக பதவியேற்றுள்ள விஜய்க்கு இலங்கை அதிபர் அநுர குமார திசநாயக்க வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து சமூக வலைதளத்தில் அதிபர் திசநாயக்க வெளியிட்டுள்ள பதிவில்,தமிழக முதல்வராக பதவியேற்ற சி. ஜோசப் விஜய்க்கு வாழ்த்துகள்.வரலாறு, கலாசாரம், தொழில்முனைவு மற்றும் தலைமுறை தலைமுறையாக நீடித்து வரும் மக்கள் உறவுகள் மூலம் இலங்கையும் தமிழகமும் பிணைக்கப்பட்டுள்ளன.
இலங்கையும் இந்தியாவும் நெருக்கமான உறவுகளையும் வலுவான கூட்டாண்மையையும் தொடர்ந்து கட்டியெழுப்பி வருவதால், நமது எதிர்காலம் மகத்தான பொருளாதார நம்பிக்கையையும் வாய்ப்புகளையும் கொண்டுள்ளது.
இந்தியா-இலங்கை கூட்டாண்மைக்குள், பெரும் செழிப்பையும் முன்னேற்றத்தையும் நோக்கி இணைந்து பணியாற்ற ஆவலுடன் உள்ளேன். இலங்கை மக்கள் என்னுடன் இணைந்து உங்களுக்கும் தமிழக மக்களுக்கும் எல்லா வெற்றிகளும் கிடைக்க வாழ்த்துகிறார்கள் என குறிப்பிட்டுள்ளார்.

