×

மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் மழையின்றி தொடர்ந்து வறட்சியால் பொலிவிழந்து காணப்படும் வனம்

*சுற்றுலா பயணிகள் வேதனை

பொள்ளாச்சி : பொள்ளாச்சியை அடுத்த மேற்குதொடர்ச்சி மலைப்பகுதியில் மழையின்றி வறட்சியால், வனப்பகுதி பொலிவின்றி இருப்பது சுற்றுலா பயணிகள் இடையே வேதனையை ஏற்படுத்துகிறது.

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த ஆண்டு பெய்த தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழையால், ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனப்பகுதி செழிப்புடன் காணப்பட்டது. வனப்பகுதியில் மட்டுமின்றி, சுற்றுலா பகுதிகளுக்கு செல்லும் ரோட்டோரத்தில் இருபுறத்திலும் உள்ள மரங்கள் மற்றும் செடி வன விலங்கு நடமாட்டம் அதிகத்தால் கொடிகள் பச்சை பசேல் என காணப்பட்டது.

ஆனால், இந்த ஆண்டில் கடந்த ஜனவரி இறுதியில் இருந்து வெயிலின் தாக்கத்தால், வனப்பகுதியில் பசுமை குறைய ஆரம்பித்தது. அதிலும் கடந்த சில சில மதமாக தொடர்ந்து வெயிலின் தாக்கத்தால், வனப்பகுதி பொலிவிழந்தது.

நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரிப்பால், வனத்தின் பெரும்பாலான இடங்களில் செடி, கொடிகள் மற்றும் மரங்கள் காய்ந்த நிலையில் உள்ளது. அதிலும், ஆழியாரில் இருந்து வால்பாறை செல்லும் மலைப்பாதை ரோட்டோரம் உள்ள மரங்கள் செடிகள் காய்ந்து, செம்மை நிறத்தில் சருகுகள் பறந்து கிடக்கிறது.

இயற்கை செழிப்புடன் இருந்த அப்பகுதி, தற்போது வறட்சியால் பொலிவு இழந்திருப்பதை காண முடிகிறது. கடந்து 2025ம் ஆண்டில் பிப்ரவரி மாதம் துவக்கத்தில் இருந்து மார்ச் மாதம் வரையிலும் வெயிலின் தாக்கம் இருந்தாலும், ஏப்ரல் மாதத்தில் அவ்வப்போது மழையால், வனப்பகுதி வறட்சியில் இருந்து தப்பியது.

ஆனால் இந்த ஆண்டில், கோடை மழையின்றி வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரிப்பால், இயற்கை சூழ்நிலையாக பச்சை பசேல் என இருந்து பொள்ளாச்சி வனப்பகுதி தற்போது வறட்சியால் பொலிவிழந்து காணப்படுவது. சுற்றுலாபயணிகள் மற்றும் இயற்கை ஆர்வலர்கள் இடையே வேதனையை ஏற்படுத்தியுள்ளது. விரைவில் கோடை மழை பெய்து, வனப்பகுதி செழிப்புடன் காண, சுற்றுலா பயணிகள் எதிர்பார்த்துள்ளனர்.

Tags : Pollachi ,Gowai ,
× RELATED வால்பாறை பகுதியில் மாசோப்சிஸ்...