×

காரில் கொண்டு வந்த ரூ.10.73 லட்சம் பறிமுதல் தேர்தல் பிரிவு நிலை கண்காணிப்புக்குழு அதிரடி

 

வேலூர், ஏப்.20: காட்பாடி அருகே இருவேறு இடங்களில் நடந்த வாகன சோதனையில் பறக்கும் படை மற்றும் நிலை கண்காணிப்புக்குழுவினர் ரூ.10.73 லட்சத்தை பறிமுதல் செய்து தாலுகா அலுவலகத்தில் ஒப்படைத்தனர். தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலான நிலையில் வேலூர் மாவட்டத்தில் 5 சட்டமன்ற தொகுதிகளுக்கும் 15 பறக்கும் படை குழுக்கள் மற்றும் 15 நிலை கண்காணிப்பு குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு 24 மணி நேரமும் சுழற்சி முறையில் கண்காணிப்புப்பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்பணியின் மூலம் நேற்று காலை வரை மாவட்டம் முழுவதும் ரூ.4.68 கோடி மதிப்புள்ள பணம், தங்கம், வெள்ளி பொருட்கள், போதை பொருட்கள், மதுவகைகள், பரிசு பொருட்கள் என கைப்பற்றப்பட்டுள்ளன.

Tags : Election Division Standing Committee ,Vellore ,Katpadi ,Flying Squad and ,Standing Committee ,Taluka Office ,Tamil Nadu ,Assembly ,
× RELATED வேலூர் ஆப்காவில் கேரள சிறைத்துறை...