×

கரூர் மாவட்டத்தில் இதுவரை ரூ.81 லட்சம் பறிமுதல்

கரூர், ஏப். 13: கரு்ர் மாவட்டத்தில் 4 தொகுதிகளிலும் பறக்கும் படை மற்றும் நிலையான கண்காணிப்பு குழு ஆகியவற்றால் இது வரை ரூ. 81 லட்சம் வரை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கடந்த மார்ச் 15ம்தேதி தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு அன்றைய தினமே தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலுக்கு வந்துவிட்டது.இதன் காரணமாக கரூர் மாவட்டத்தில் உள்ள கரூர், அரவக்குறிச்சி, கிருஷ்ணராயபுரம் (தனி), குளித்தலை ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகளிலும் முறையான ஆவணங்களின்றி பணம் மற்றும் பொருட்கள் எடுத்துச் செல்வதை காண்காணிக்க 24 மணி நேரமும் பறக்கும் படை மற்றும் நிலையான கண்காணிப்புக்குழு செயல்பட்டுவருகிறது.

இந்த குழுவினர் 4 தொகுதிகளிலும் வாகனங்களை நிறுத்தி சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் நேற்று காலை 6 மணி வரை ரூ. 81 லட்சத்து 36 ஆயிரத்து 851 பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, முறையான ஆவணங்கள் இருந்த காரணத்தினால் இந்த குழுவினர் ரூ. 74லட்சத்து 90 ஆயிரத்து 701ஐ விடுவித்தனர். தற்போது வரை ரூ.6 லட்சத்து 46 ஆயிரத்து 150 இருப்பில் உள்ளதாக காட்டப்பட்டுள்ளது. மேலும், இந்த குழுவினர் 59 வழக்குகளை பதிவு செய்து, 51 வழக்குகளை விடுவித்துள்ளனர். 8 வழக்குகள் நிலுவையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags : Karur district ,Karur ,Flying Squad ,Standing Vigilance Team ,Tamil Nadu Assembly ,
× RELATED குளித்தலையில் முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் வாக்குப்பதிவு