- ஜனாதிபதி ஸ்டாக்கர்
- இந்தியா
- புது தில்லி
- ஜனாதிபதி
- கிறிஸ்டியன் ஸ்டாக்கர்
- மத்திய வெளியுறவுத்துறை அமைச்சு
புதுடெல்லி: ஆஸ்திரிய அதிபர் கிறிஸ்டியன் ஸ்டாக்கர் வரும் 14ம் தேதி இந்தியா வர உள்ளார். இதுகுறித்து ஒன்றிய வெளியுறவு அமைச்சகம் நேற்று வௌியிட்ட அறிவிப்பில், “வர்த்தகம், முதலீடு, பொருளாதாரம், எரிசக்தி மற்றும் முக்கிய தொழில்நுட்பங்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்காக ஆஸ்திரிய அதிபர் கிறிஸ்டியன் ஸ்டாக்கர் வரும் 14ம் தேதி இந்தியா வர உள்ளார்.
அப்போது பிரதமர் மோடியை சந்திக்கும் அவர், இந்தியா ஆஸ்திரியா நாடுகளின் இருதரப்பு உறவுகள் மற்றும் உலகளாவிய பல்வேறு விவகாரங்கள் குறித்து விரிவான பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். மேலும் இந்த வருகையின்போது குடியரசு தலைவர் திரவுபதி முர்முவையும் சந்தித்து பேச உள்ளார். கடந்த 2024ம் ஆண்டு ஜூலை மாதம் பிரதமர் மோடி ஆஸ்திரியாவுக்கு பயணம் மேற்கொண்ட பிறகு இருநாடுகளின் உறவு பலப்பட்டது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

