சென்னை: மாம்பழம் சின்னத்தை முடக்கக் கோரிய வழக்கை அவசர வழக்காக விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துள்ளது. தங்கள் வழக்கை பிற்பகலில் அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று ராமதாஸ் தரப்பு கோரிக்கை நிராகரிப்பு. மனு எண்ணிடப்படாமல் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது என தலைமை நீதிபதி அமர்வு தெரிவித்துள்ளது.
