×

தேர்தல் ஆணையத்தை கண்டித்து நாதக முழக்கம்

பல்லாவரம், ஏப்.8: சட்டமன்ற தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 6ம் தேதியுடன் நிறைவடைந்தது. இந்த மனுக்கள் மீதான பரிசீலனை நேற்று நடந்தது. அதன்படி பல்லாவரம் தாலுகா அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் முன்னிலையில் நடைபெற்றது. பொதுவாக தேர்தலில் நிற்பதற்காக பூர்த்தி செய்து கொடுக்கப்படும் மனுக்களில் தனிநபர் விவரம், சொத்து விவரங்கள், பணம் கையிருப்பு போன்றவற்றை கண்டிப்பாக பூர்த்தி செய்ய வேண்டும். அவ்வாறு முறையாக அனைத்து விவரங்களும் பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் உடனடியாக நிராகரிகரிக்கப்படும்.

ஆனால், பல்லாவரம் தொகுதியில் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் முறையாக பூர்த்தி செய்யப்படாத மனுக்களை எவ்வித ஆட்சேபனையுமின்றி ஏற்றுக் கொள்வதாகவும், வேண்டுமென்றே நாம் தமிழர் கட்சியினரின் வேட்பு மனுவை நிராகரிப்பதாகவும் கூறி நேற்று பல்லாவரம் தாலுகா அலுவலகம் முன்பாக நின்று, தேர்தல் ஆணையத்திற்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

 

Tags : Nataka ,Election Commission ,Pallavaram ,Pallavaram Taluka Office ,
× RELATED சட்டமன்ற தேர்தலையொட்டி 100 சதவீத வாக்களிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்