மதுரை: மானாமதுரை ஆகாஷ் கொலை வழக்கில் இறந்த உடலை வைத்து அரசியல் செய்வது ஏன்? என உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது. உடலை வைத்து போராட்டம் நடத்துவது, சமீப காலத்தில் ஒரு வழக்கமாக உள்ளது. விசாரணை அதிகாரிக்கு தேவையில்லாமல் அழுத்தம் கொடுப்பது ஏற்புடையது அல்ல. பெற்றோரிடம் பேசி, ஆகாஷின் உடலை கண்ணியமாக அடக்கம் பெற்றுக்கொண்டு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.
