×

வீர ராசேந்திரன் கால கல்வெட்டு கண்டுபிடிப்பு

 

உடுமலை, மார்ச் 21: உடுமலை அருகேயுள்ள கல்லாபுரம் அடுத்த கோபாலபுரம் காட்டுப்பகுதியில் 12ம் நூற்றாண்டில் வடகொங்கு, தென்கொங்கு என இரண்டையும் ஆட்சி செய்த வீர ராசேந்திரன் கால கல்வெட்டு ஒன்றை உடுமலை வரலாற்று ஆய்வு நடுவத்தினர் ஆவணப்படுத்தினர்.
இந்தக் கல்வெட்டில் ‘ஸ்வஸ்ஸ்ரீ வீரராசேந்திர தெவற்கு யாண்டு மங்கலத்து மலையாட்டி சாத்தன் ஆப’ என்று எழுதப்பட்டுள்ளது. இதன் முழுமையான கல்வெட்டு கிடைக்கவில்லை.
தொல்லியல் ஆய்வாளர் மூர்த்தீஸ்வரி கூறுவதாவது: மேற்காண்ட கல்வெட்டு வீர ராசேந்திரன் என்றும் தேவற்கு என்றும் மங்கலத்து மலையாட்டி என்று சொல்லப்பட்டிருக்கிறது.

Tags : Veera Rasendran ,Udumalai ,Gopalapuram ,Kallapuram ,Udumalai Historical Research Centre ,Vadagonga ,Tengonga ,
× RELATED பாலக்காட்டில் 31ம் தேதி பாடகர் எஸ்பிபி சிலை திறப்பு