×

இருப்பதே நாலுதான்.. இதுல கூட்டணிக்கு இரண்டா? தேனி அதிமுகவினர் ‘ஷாக்’

 

தேனி மாவட்டத்தில் ஆண்டிபட்டி, போடி, பெரியகுளம், கம்பம் ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இதில் கம்பம் தொகுதியை தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என பாஜ தரப்பில் அதிமுகவிற்கு கடும் நெருக்கடி கொடுக்கப்பட்டு வருகிறது. இத்தொகுதியில் இம்முறை தனக்கு சீட் கிடைக்குமென்ற நம்பிக்கையில் அதிமுக மாஜி எம்பியும், மாவட்ட செயலாளருமான எஸ்டிகே.ஜக்கையன் காத்திருந்தார். பாஜ தரப்பு நெருக்கடியால் கம்பத்தை பாஜவுக்கு ஒதுக்கவும், ஜக்கையனுக்கு போடி தொகுதியை ஒதுக்கவும் எடப்பாடி முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

தற்போது போடி தொகுதி எம்எல்ஏவாக இருந்த ஓ.பன்னீர்செல்வம், திமுகவில் இணைந்ததால் அங்கு வலுவான ஒருவர் வேட்பாளராக நிற்க வேண்டுமென எடப்பாடி விரும்புகிறார். ஏற்கனவே போடி தொகுதியை தங்களுக்கு ஒதுக்க வேண்டுமென முன்னாள் எம்பி பார்த்திபன் மற்றும் கடந்த எம்பி தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த நாராயணசாமி முயற்சித்து வருகின்றனர். தற்போது ஜக்கையன் லீடிங்கில் இருப்பதால், கடும் அதிருப்தியில் உள்ளனர்.

மாவட்டத்தின் மற்றொரு முக்கிய ெதாகுதியான பெரியகுளம் தொகுதியை, தன்னுடன் வந்ததால் எம்எல்ஏ பதவியை இழந்த டாக்டர் கதிர்காமுக்கு வழங்க வேண்டுமென டிடிவி.தினகரன் ஆரம்பத்தில் இருந்தே கேட்டு வருகிறார். பாஜ விருப்பத்தில் கூட்டணியில் இணைந்ததால், அவர்களின் ஆதரவும் இதில் முக்கிய பங்கு வகிக்க, வேறு வழியின்றி பெரியகுளம் தொகுதி அமமுகவுக்கு கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. இதனால் பெரியகுளம் சட்டமன்ற தொகுதியில் சீட் கிடைக்கும் என கட்சி பணிகளில் தீவிரம் காட்டி வந்த அதிமுகவை சேர்ந்த வழக்கறிஞர்களான தவமணி, சுரேஷ்குமார் ஆகியோர் பெரும் கவலை அடைந்துள்ளனர்.

தேனி மாவட்டத்தில் அதிமுகவின் செல்வாக்கு ஓகோவென்று இருந்தது. தற்போது மங்கி போயிருந்தாலும், 3 தொகுதிகளாவது நாம போட்டியிட வேண்டாமா? 2 சட்டமன்ற தொகுதிகளை கூட்டணிக்கு ஒதுக்குவதால் அதிமுகவிற்கான பிரதிநிதித்துவம் பாதியாக குறைந்து விடும். இந்த முடிவை கைவிடுமாறு தேனி மாவட்ட அதிமுகவினர் தலைமைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Theni District ,Andipathi ,Bodi ,Peryakulam ,Gampam ,Supreme Court ,
× RELATED சென்னை கோயம்பேட்டில் உள்ள தலைமை...