மதுரை: தமிழ்நாடு முழுவதும் உள்ள சீமை கருவேல மரங்களை அகற்ற உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. ‘வட மாவட்டங்களுக்கு ஓய்வு பெற்ற நீதிபதி பாரதிதாசன், தென் மாவட்டங்களுக்கு ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.செல்வம் கண்காணிப்பில் சீமை கருவேல மரங்கள் அகற்றும் பணி நடைபெறும். எவ்வாறு அகற்றுவது குறித்து 39 உத்தரவுகள் கொடுக்கப்பட்டுள்ளன’ என உயர்நீதிமன்ற கிளை நீதிபதி தெரிவித்துள்ளார்.
