- தில்லி உயர் நீதிமன்றம்
- யூனியன்
- எப்ஸ்டீன்
- புது தில்லி
- ஜெஃப்ரி எப்ஸ்டீன்
- மன்ஹாட்டன்
- எங்களுக்கு
- அதிபர் டிரம்ப்
புதுடெல்லி: அமெரிக்காவை சேர்ந்த தொழிலதிபர் ஜெப்ரி எப்ஸ்டீன். சிறுமிகளை கடத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய வழக்கில் 2019-ம் ஆண்டு ஜூலையில் அவர் கைது செய்யப்பட்டார். அதே ஆண்டில் மான்ஹாட்டன் சிறையில் தற்கொலை செய்து கொண்டார். அமெரிக்க அதிபர் டிரம்ப், பல்வேறு உலக நாடுகளின் தலைவர்கள், அமெரிக்காவின் முன்னணி தொழிலதிபர்களுக்கு எப்ஸ்டீனுடன் நெருங்கிய தொடர்பு இருந்ததாகக் கூறப்படுகிறது. இவை தொடர்பான ஆவணங்கள், வீடியோக்கள் வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன. ஜெப்ரி எப்ஸ்டீன் தொடர்பான கோப்புகளில் ஒன்றிய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரியின் பெயர் இடம் பெற்றுள்ளதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியது.
ஹர்தீப்சிங்கின் மகளான ஹிமாயனி பூரிக்கும் எப்ஸ்டீனுக்கும் தொடர்பு இருப்பதாக சமூக ஊடகங்கள், யூடியூப்,இன்ஸ்டாகிராம்,பேஸ்புக்,டிஜிட்டல் செய்தி தளங்களில் கட்டுரைகள் வெளியாகின. தன்னுடைய பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில்,ஜெப்ரி எப்ஸ்டீனுடன் தொடர்புபடுத்தும் பதிவுகளை தடை விதிக்க கோரியும் ரூ.10 கோடி இழப்பீடு கோரி ஹிமாயனி டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதை விசாரித்த நீதிபதி மினிபுஷ்கர்ணா ஹிமாயனி பூரியை எப்ஸ்டீனுடன் தொடர்புபடுத்தும் அவதூறான உள்ளடக்கத்தை நீக்குமாறு இடைக்கால உத்தரவை நேற்று பிறப்பித்தார்.அவருக்கு எதிராக எந்தவொரு அவதூறான தகவலையும் வெளியிடவோ அல்லது பரப்பவோ கூடாது என நீதிமன்றம் தடை விதித்தது.
