- சக்ரவர்த்தி
- வாஷிங்டன்
- சுந்தர்
- முதல் அமைச்சர்
- மு.கே ஸ்டாலின்
- சென்னை
- வருண் சக்ரவர்த்தி
- T20 உலக கோப்பை
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
சென்னை: டி20 உலக கோப்பை வென்ற இந்திய அணியில் இடம்பெற்ற வருண் சக்கரவர்த்தி, வாஷிங்டன் சுந்தர் இருவரும் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினை இன்று நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். விடாமுயற்சி, ஒழுக்கம், தன்னம்பிக்கையுடன் விளையாடி வெற்றி பெற்றது குறித்து கலந்துரையாடியதாக முதல்வர் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பான புகைப்படங்களை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருப்பதாவது:-
தமிழகத்தைச் சேர்ந்த நம்முடைய “ஸ்பின் ட்வின்ஸ்” வாஷிங்டன் சுந்தர் மற்றும் வருண் சக்கரவர்த்தியுடனான மறக்க முடியாத தருணங்கள். இந்த சந்திப்பின்போது உறுதி, விடாமுயற்சி, கட்டுப்பாடு மற்றும் தன்னம்பிக்கை ஆகியவற்றால் செதுக்கப்பட்ட அவர்களின் பயணத்தைப் பற்றி, அவர்களுடன் ஒரு அற்புதமான கலந்துரையாடலை மேற்கொண்டேன். வாஷிங்டன் சுந்தர், வருண் சக்கரவர்த்தி ஆகியோருக்கு, இனிவரும் காலங்களில் மேலும் பல வெற்றியைத் தேடித்தரும் பந்துவீச்சுத் தருணங்களும், பெருமைமிக்க தருணங்களும் அமைய வாழ்த்துகிறேன் என தெரிவித்தார்.
