×

தகராறில் கொத்தனார் உயிரிழப்பு

அவனியாபுரம். மார்ச் 16: மதுரை, அவனியாபுரம் அருகே வலையங்குளத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் இவரது மகன் பாண்டி (55). இதே பகுதியை சேர்ந்த கண்ணன் மகன் சுரேஷ் (54). கொத்தனார்களான இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் இரவு மேலத்தெருவில் கேரம் போர்டு விளையாடினர்.

அப்போது ஏற்பட்ட தகராறில் சுரேஷ் திடீரென கீழே தள்ளியதில் தலைப்பகுதியில் காயமடைந்த பாண்டி மயங்கினார். சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் நேற்று உயிரிழந்தார். இதையடுத்து வழக்கு பதிவு செய்த பெருங்குடி போலீசார், சுரேசை கைது செய்தனர்.

 

 

Tags : Avaniapuram ,Pandi ,Arumugam ,Valiyankulam ,Avaniapuram, Madurai ,Suresh ,Kannan ,
× RELATED வீட்டில் பதுக்கி வைத்திருந்த 1 டன் ரேஷன் அரிசி பறிமுதல்