- அஇஅதிமுக
- சேரன்மகாதேவி
- Veeravanallur
- அதிமுக தொண்டர்கள்
- நெல்லை புறநகர் மாவட்டம்
- இசக்கிசுப்பையா
- சட்டமன்ற உறுப்பினர்
- மாநில எம்.ஜி.ஆர்.
- மன்றம்
வீரவநல்லூர், மார்ச் 14: சேரன்மகாதேவியில் அதிமுக செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் நெல்லை புறநகர் மாவட்ட செயலாளர் இசக்கிசுப்பையா எம்எல்ஏ தலைமை வகித்தார். கூட்டத்தில் சட்டமன்ற தேர்தலையொட்டி கட்சி உறுப்பினர்களுக்கு பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டது. கூட்டத்தில் மாநில எம்.ஜி.ஆர் மன்ற இணைச் செயலாளர் ராகவன், மாவட்ட அவைத்தலைவர் கூனியூர் மாடசாமி, ஒன்றிய செயலாளர் மாரிச்செல்வம், நகரச்செயலாளர் வக்கீல் பழனிகுமார், ஒன்றிய துணை செயலாளர் பன்னீர்செல்வம், அமமுக ஒன்றிய செயலாளர் தெய்வநாயகம், பாஜ ஒன்றிய தலைவர் அஸ்வின், சிறுபான்மை பிரிவு நிர்வாகி இசக்கார்ராஜபால், முன்னாள் அரசு வக்கீல் சிவலிங்கமுத்து உள்பட பலர் கலந்துகொண்டனர்.
